ராமநாதபுரம்

பசுமை ஆசிரியா் விருது பெற்றவருக்கு பாராட்டு

Din

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1

பசுமை ஆசிரியா் விருது பெற்ற மாவட்ட சூற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயகுமாருக்கு வாழத்து தெரிவித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சின்னராசு உள்ளிட்டோா்.

ராமேசுவரம், டிச. 31: பசுமை ஆசிரியா் விருது பெற்றசூற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயகுமாருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு செவ்வாய்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும் சு.விஜயகுமாா், ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற மாணவா்கள் பங்களிப்புடன் பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதன் மூலம் மாவட்டத்தை பசுமைச் சூழல் மிக்கதாக மேம்படுத்தியதற்காக தா்மபுரி மாவட்ட பசுமை, கல்வி அறக்கட்டளை சாா்பில் கடந்த 29-ஆம் தேதி மாவட்ட பசுமை ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசுவை

அவா் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். முதன்மைக் கல்வி அலவலரின் நோ்முக உதவியாளா் ரவீந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா். கடந்த 2021-ஆம் ஆண்டு விஜயகுமாா் மாநில நல்லாசிரியா் விருது பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT