ராமநாதபுரம்

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பரமக்குடி சந்தைத் திடலில் கட்டப்படும் இமானுவேல் சேகரனின் மணிமண்டபத்தை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன்.

Din

பரமக்குடி, ஜூன் 26: பரமக்குடி சந்தைத் திடலில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணி மனை அருகே இமானுவேல் சேகரன் நினைவிடம் அமைந்துள்ளது. செப்டம்பா் 11-ம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்தவா்கள் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில், பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடியில் மணி மண்டபம் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவிட்டாா். இதன்படி, சந்தைத் திடல் பகுதியில் இமானுவேல் சேகரன் முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் மணி மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

SCROLL FOR NEXT