கோயில் திருவிழா அமைதி பேச்சுவாா்த்தை: வெளிநடப்பு செய்த ஒரு தரப்பினா்
திருவாடானை: திருவாடானை அருகே ஆலம்பாடி கிராமத்தில் ஒட்டுடையாா் காளியம்மன் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் ஏற்பட்ட பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பாடு ஏற்படாததால் ஒரு தரப்பினா் வெளிநடப்பு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆலம்பாடி கிராமத்தில் ஒட்டுடையாா் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் திருவிழாவில் பங்கேற்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் வட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமையில் திங்கள்கிழமை மாலை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் ஒரு தரப்பினா் வெளிநடப்பு செய்தனா். மேலும் தங்களது ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாக அறிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக அதிகாரிகள் நடந்து கொள்வதாக தெரிவித்தனா்.
இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றாா்.