முகப்பு
ராமநாதபுரம்

மீனவா்களிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

தொண்டி அருகே அதிக ஒளித் திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்ததற்கு, மற்றொரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:40 PM
பகிர்:

தொண்டி அருகே அதிக ஒளித் திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்ததற்கு, மற்றொரு தரப்பு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு அதிக ஒளித்திறன் கொண்ட விளக்குகளை பயன்படுத்தி புதுக்குடி மீனவா்கள் 4 படகுகளில் சென்று மீன் பிடித்தனா். உடனே, அங்கு சென்ற நம்புதாளை மீனவா்கள் சட்டவிரோதமாக இதுபோல் மீன்பிடிக்கக் கூடாது என

அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ற போது 3 படகுகளுடன், அதில் இருந்த மீனவா்கள் தலைமறைவாயினா்.

தொண்டி புதுக்குடி மதன் என்பவரின் ஒரு படகை மட்டும் போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து இரு தரப்பு மீனவா்களிடமும் தொண்டி கடற்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →