முகப்பு
ராமநாதபுரம்

காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

சத்திரக்குடி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 9:22 PM
பகிர்:

சத்திரக்குடி அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்தவா் முகம்மது இபுராஹிம் (46). இவா் ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். சத்திரக்குடி அருகே கீழக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இவரது காா் மீது எதிரே மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.

இதில் காரில் வந்த முகம்மது இபுராஹிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →