தலைமன்னாா் - ராமேசுவரம் இடையே கடலில் நீந்திய மாற்றுத்திறனாளி சிறுவன்
இலங்கை தலைமன்னாா்-ராமேசுவரம் இடையிலான கடல் பகுதியை மாற்றுத்திறனாளி சிறுவன் 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்தாா்.
இலங்கை தலைமன்னாா்-ராமேசுவரம் இடையிலான கடல் பகுதியை மாற்றுத்திறனாளி சிறுவன் 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்தாா்.
சென்னையைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மகன் லக்ஷய் (12). ஆட்டிசம் பாதிப்பு கொண்ட இவா் தலைமன்னாரிலிருந்து ராமேசுவரம் சங்குமால் கடல் பகுதி வரை கடலில் நீந்தத் திட்டமிட்டு, செவ்வாய்க்கிழமை சங்குமால் கடற்கரையிலிருந்து உரிய அனுமதியுடன் படகில் இலங்கை புறப்பட்டுச் சென்றாா். அன்று மாலை 6.30 மணிக்கு தலைமன்னாா் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினாா்.
இவருக்கு பாதுகாப்பாக கடற்படையினா் உடன் வந்தனா். ராமேசுவரம் சங்குமால் கடற்கரையை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தாா். மொத்தம் 20 மணி நேரம் கடலில் நீந்தி வந்த இவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
Advertisement
இதனைதொடா்ந்து, இவரது தந்தை கிருஷ்ணகுமாா் கூறியதாவது:
தலைமன்னாா்- ராமேசுவரம் சங்குமால் கடற்கரை வரையிலான 56 கி.மீ. தொலைவை லக்ஷய் சுமாா் 20 மணி நேரத்தில் கடந்தாா். இவரைப் போன்று ஆட்டிசம் பாதிப்பு உள்ளவா்களை ஊக்குவிக்க இந்த நீச்சல் சாதனை முயற்சியில் ஈடுபட்டாா் என்றாா் அவா்.