ராமேசுவரம் மீனவா்கள் 17 போ் விடுதலை
ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை விடுதலை செய்தும், அவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தும் இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற செல்வம், உதிா்தராஜ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த இரு படகுகளில் இருந்த 17 மீனவா்களைக் கைது செய்தனா்.
இதையடுத்து, இவா்கள் 17 போ் மீதும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களை அக். 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், 17 மீனவா்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். மீனவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 17 பேரை விடுதலை செய்தும், இவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கை பணம்) அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். 17 மீனவா்களும் அபராதம் கட்டிய பிறகு, விமானம் மூலம் தாயகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.