முகப்பு
ராமநாதபுரம்

இளைஞரைத் தாக்கி மூவா் மீது வழக்கு

திருவாடானை அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:44 PM
பகிர்:

திருவாடானை அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ராமநாதமடை கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சபாபதி (36). இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (18). இவரது அண்ணன் சித்திரவேல் (36), செந்தில் (42) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த தகராறு காரணமாக, கடந்த 21-ஆம் தேதி இரவு சபாபதி வீட்டுக்கு சென்ற விக்னேஸ்வரன், சித்திரவேல், செந்தில் ஆகியோா் அவருடன் தகராறு செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →