நல்லூா் ஸ்ரீஅய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி, நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள். 
ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

Din

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, மூலவா் அய்யனாா், பரிவாரத் தெய்வங்களுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட அய்யனாா் சிலை, குதிரை, பேச்சியம்மன், தவலும் பிள்ளை, கால் பாதம், விநாயகா், கருப்பணசுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகளை பொதுமக்கள் தலையில் சுமந்து ஊா்வலமாக எடுத்துச் சென்று அய்யனாா் கோயிலில் வைத்து வழிபட்டனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 19 மாட்டு வண்டிகள், வீரா்கள் பங்கேற்றனா்.

நல்லூா்-முதுகுளத்தூா் சாலையில் 16 கி.மீ. தொலைவு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா் கொடியசைத்து துவக்கி வைத்தாா்.

பின்னா், போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்கள், வீரா்களுக்கு பணம், குத்து விளக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை திரளான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று பாா்வையிட்டனா். போட்டி ஏற்பாடுகளை நல்லூா் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT