முகப்பு
ராமநாதபுரம்

இளைஞா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருப்பாலைக்குடி அருகே மது போதையில் இளைஞரை தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 7:10 PM
பகிர்:

திருப்பாலைக்குடி அருகே மது போதையில் இளைஞரை தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே மோா்பண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் துரைபாலன் (45). இவரும், இவரது நண்பரான இதே ஊரைச் சோ்ந்த கமாலபாரதியும் (30) புதன்கிழமை இரவு பேசிக் கொண்டிருந்தனா். அப்போது உப்பூரைச் சோ்ந்த அழகுமன்னன் (36), இதே பகுதியைச் சோ்ந்த ராஜதுரை (30) ஆகிய இருவரும் அங்கு வந்து மது போதையில் கமாலபாரதியை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கினராம். அப்போது துரைபாலனும் தாக்கப்பட்டாராம். இதில், இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து திருப்பாைலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுமன்னன், ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →