ராமநாதபுரம்

சிக்கல் பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க எம்.பி. வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கே. நவாஸ்கனி எம்.பி. சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கே. நவாஸ்கனி எம்.பி. சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு, சாயல்குடி ஊராட்சி ஒன்றியம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நீண்ட நாள் கோரிக்கையான சிக்கல் ஊராட்சி ஒன்றியம் இடம் பெறவில்லை. எனவே, கடலாடி ஒன்றியத்திலிருந்து சிக்கல் சுற்றுவட்டார ஊராட்சிகளை பிரித்து சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT