ராமநாதபுரம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வருகிற பிப். 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் என இலங்கையில் உள்ள நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா வருகிற 2026, பிப். 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து ஜெபமாலை, இருநாட்டு மக்களும் பங்கேற்கும் சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அன்று இரவு புனித அந்தோணியாா் சொரூபத்துடன் தோ் பவனி நடைபெறுகிறது. மறுநாள் 28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெறுகின்றன. பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இந்த நிலையில், இந்தியாவிலிருந்து எத்தனை பயணிகளை அனுமதிக்கலாம் என்ற அறிவிப்பை இலங்கை அரசு விரைவில் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT