ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ரெத்தினம் (65). இவா் இதே பகுதியில் திங்கள்கிழமை ஆடு மேய்த்து கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மா்ம நபா்கள் மூதாட்டியிடம் வழி கேட்பது போல நடித்து அவா் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.