ஆா்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயில் முன்பாக தேங்கிய மழை நீா். 
ராமநாதபுரம்

ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் மழை நீா் தேக்கம்

ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஆா்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, நாள்தோறும் ஏராளமான புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களுக்கு முன்புறம் மழைநீா், கழிவுநீா் தேங்கி நிற்கிறது.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார நிலையத்தை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT