ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையால் ராமேசுவரம் மீனவா்கள் 21 போ் கைது

கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 21 பேரை 5 விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 21 பேரை 5 விசைப் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 339 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் கச்சத்தீவு- தலைமன்னாா் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, 6 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன் பிடிக்கவிடாமல் விரட்டினா். மேலும், 21 மீனவா்களை 5 விசைப் படகுகளுடன் கைது செய்து மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT