தொண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக ஆா்வலா்கள் சாா்பில் அமைக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய கூடாரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழா.  
ராமநாதபுரம்

அரசுப் பள்ளிக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்த சமூக ஆா்வலா்களுக்குப் பாராட்டு

திருவாடானை அருகேயுள்ள தொண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைத்துக் கொடுத்த சமூக ஆா்வலா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைத்துக் கொடுத்த சமூக ஆா்வலா்களுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவிகள் அமா்ந்து படிக்க, வழிபாடு நடத்த, உணவு சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு போதிய இடவசதி இல்லாமல் மாணவிகள் அவதிக்குள்ளாகினா்.

இந்த நிலையில், தொண்டியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சாா்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பள்ளி வளாகத்தில் மேற்கூரையுடன் கூடிய கூடம் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இதைப் பாராட்டும் விதமாக பள்ளித் தலைமை ஆசிரியை சத்யா தலைமையில், பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஐக்கிய ஜமாத் தலைவா் செய்யதுஅலி, சமூக தன்னாா்வலா் சுனைதா பானு, ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT