முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் நாளை மின் தடை

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:05 AM
மின்தடை
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 6:43 PM

திருவாடானை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 10:58 PM

திருவாடானை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாடானை, நகரிக்காத்தான் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட திருவாடானை, சி.கே. மங்கலம், பாண்டுகுடி, நகரிக்காத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாவூரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி. நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்ப்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா், பதனக்குடி, இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.

Advertisement