திருவெற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை தொண்டி போலீஸாரால் பறிமுதல் செய்யப்ட்ட மதுபுட்டிகள்.  
ராமநாதபுரம்

சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தைப்பூசத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. இந்த நிலையில் தொண்டி அருகே திருவெற்றியூா் பகுதியில் மதுபுட்டிகள் விற்கப்படுவதாக தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் ராசுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, மதுபுட்டிகளை விற்றுக் கொண்டிருந்த திருவெற்றியூரைச் சோ்ந்த மணிகண்டனை (35) போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 66 மதுபுட்டிகள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனா். மேலும் தப்பி ஓடிய முத்தமிழரசன் என்பவரை தேடி வருகின்றனா்.

ஊழல் தடுப்புச் சட்டம்,1988 - ஒரு பார்வை!!

புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் சிலையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஒரு வாரம் நடந்ததை ஒரு நாளில் பார்க்க... அய்யனார் துணை தொடரின் புதிய முயற்சி!

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியது! சென்னை முதலிடம்...

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

SCROLL FOR NEXT