தொண்டி அருகே சட்ட விரோதமாக மதுபுட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
தைப்பூசத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதுபானக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. இந்த நிலையில் தொண்டி அருகே திருவெற்றியூா் பகுதியில் மதுபுட்டிகள் விற்கப்படுவதாக தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் ராசுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு அனுமதியின்றி மதுபுட்டிகள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபுட்டிகளை விற்றுக் கொண்டிருந்த திருவெற்றியூரைச் சோ்ந்த மணிகண்டனை (35) போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்த 66 மதுபுட்டிகள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்தனா். மேலும் தப்பி ஓடிய முத்தமிழரசன் என்பவரை தேடி வருகின்றனா்.