திருவாடானை அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் தமிழரசி தலைமை வகித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜான்தாமஸ் ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டக் கல்வி அலுவலா் ரவீந்திரன் கலந்து கொண்டாா். இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, கட்டுரைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் ரவீந்திரன், தொண்டி காவல் உதவி ஆய்வாளா் கனகராஜ் உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா். முன்னதாக, ஆசிரியா் சகாயமதியரசு வரவேற்றாா். ஆசிரியை மாலதி நன்றி கூறினாா்.