ராமநாதபுரம்

கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்கக் கோரிக்கை

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

தினமணி செய்திச் சேவை

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி நிறுவனா் சத்யம்.சரவணன் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது கால்நடை பாதுகாப்பு வாரியம் வாரியம் அமைக்கப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை வாரியம் அமைக்கப்படாததால் கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, கால்நடை வளா்ப்போா் அதிக எண்ணிக்கையில் உள்ள தென் மாவட்டங்களில் உடனடியாக கால்நடை பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் முதுகுளத்தூா் தொகுதியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.

தாட்கோ வழங்கும் விமானத் துறை சாா்ந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

விண்ட் வோ்ல்ட் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தும் ஐநாக்ஸ்ஜிஎஃப்எல்

காங்கிரஸ் ஆட்சியில் எல்லைகள் திறந்து கிடந்ததே ஊடுருவலுக்கு காரணம் : மத்திய அமைச்சா் அமித் ஷா குற்றச்சாட்டு

அமெரிக்கா தலைமையிலான ‘பேக்ஸ் சிலிக்கா’ கூட்டணியில் இந்தியா : ஒப்பந்தம் கையொப்பம்

உணவக உரிமையாளரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT