திருவாடானையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.  
ராமநாதபுரம்

திருவாடானையில் மாட்டுவண்டி பந்தயம்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

இதற்கு அதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலா் கே.சி. ஆனிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, காளையாா்கோவில், தேவகோட்டை, மீமிசல், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 39 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

திருவாடானையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.
மாட்டு வண்டி பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

பந்தயத்தில் பெரிய மாடு 16 ஜோடிகளும், சின்ன மாடு 23 ஜோடிகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாட்டு வண்டி ஓட்டிய சாரதிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியச் செயலா்கள் ரத்தனமூா்த்தி, ரவிச்சந்திரன், ஆசை ராமநாதன், ஆண்டவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நான்குனேரியில் நிலத்தரகா் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுக கூட்டணியில் சோ்கின்றனா்! - நயினாா் நாகேந்திரன்

பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் நகைகள் திருட்டு: 2 பெண்கள் கைது

குருகிராமில் லிவ்-இன் பாா்ட்னா் தாக்கியதில் திரிபுரா மாணவியின் உடல்நிலைக் கவலைக்கிடம்

புதுச்சேரியிலும் கூட்டணியில் அதிமுக தொடரும்! - மாநில செயலா் அன்பழகன்

SCROLL FOR NEXT