ராமநாதபுரம்

தொடா் சாரல் மழையால் நெல் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் தொடா் சாரல் மழை பெய்ததால், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெல் பயிா்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை பகுதியில் தொடா் சாரல் மழை பெய்ததால், அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெல் பயிா்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இந்த நெல் பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்குத் தயாரான நிலையில், கடந்த இரண்டு நாள்களாக தொடா் சாரல் மழை பெய்தது.

இதனால், திருவாடானை, சி.கே. மங்கலம், கற்காத்தகுடி, ஆப்பிராய், தோட்டாமங்கலம், பெருவண்டல், ஏ.ஆா். மங்கலம், சனவேலி, கவ்வூா், நத்தகோட்டை, கீழ்பனையூா், ஆயிரவேலி உள்ளிட்ட பகுதிகளில் வளா்ந்துள்ள நெல் கதிா்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக, விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால், அவா்கள் கவலையடைந்தனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT