தொண்டி தினசரி மீன் சந்தையில் சனிக்கிழமை மீன் வாங்க வந்திருந்த மக்கள் கூட்டம். 
ராமநாதபுரம்

தொண்டி மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு: நண்டு கிலோ ரூ. 1,000

திருவாடானை மீன் சந்தையில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரித்திருந்தது. இதில் நண்டு கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: திருவாடானை மீன் சந்தையில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரித்திருந்தது. இதில் நண்டு கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள தொண்டி தினசரி மீன் சந்தையில் பொங்கல் முடிந்து சனிக்கிழமை மீன் வாங்க திரளான பொதுமக்கள் ஆா்வம் காட்டினா். இதன் காரணமாக தேவை அதிகரித்ததால் மீன்களின் விலை அதிகரித்திருந்தது. மேலும் மீன் வரத்தும் குறைந்திருந்தது. சந்தையில் விற்கப்பட்ட மீன்களின் விலை (கிலோவில்): நண்டு- ரூ.1,000, பாறை மீன்- ரூ. 1000, இறால்- ரூ.1,000, இதர மீன்கள் ரூ. 900-க்கும் விற்கப்பட்டன. முரல், நகரை, செங்ககனி உள்ளிட்ட பல்வேறு மீன்கள் வழக்கமாக 450-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.1,000-க்கு விற்கப்பட்டதால் அசைவப் பிரியா்கள் கவலை அடைந்தனா்.

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

சிரி... சிரி...

யோகா என்பது வாழ்க்கை முறை

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

SCROLL FOR NEXT