திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழியகுடி, புதுப்பட்டினம், வட்டானம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், திணையத்தூா், திருவெற்றியூா், அச்சங்குடி, எஸ்.பி. பட்டினம், பாசிப் பட்டினம், எம்.வி. பட்டினம், வி.எஸ். மடம், குளத்தூா், மைக்கேல் பட்டினம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவித்தாா்.