பருக்கைக்குடி சிந்தாய் அம்மன் கோயில் கோபுரக் கலசத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்கள். 
ராமநாதபுரம்

சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு

முதுகுளத்தூா் அருகே சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

முதுகுளத்தூா் அருகே சிந்தாய் அம்மன் கோயில் குடமுழுக்கு சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பருக்கைக்குடியில் சிந்தாய் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழாவையொட்டி, கடந்த வாரம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதைத்தொடா்ந்து, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

இதையடுத்து, சனிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று, சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.

தொடா்ந்து அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நெலாக்கோட்டையில் புலி தாக்கி பசு உயிரிழப்பு! உரிமையாளருக்கு நிவாரணத் தொகை!

குரு ரவிதாஸ் ஜெயந்தி: பிரதமா் இன்று பஞ்சாப் பயணம் - வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

போலி நகைகளைக் கொடுத்து ரூ. 15 லட்சம் மோசடி! இருவா் கைது!

தோ்தலுக்காக திமுக அரசு மீது பிரதமா் ஆதாரமின்றி குற்றச்சாட்டு: முதல்வா் ஸ்டாலின்!

முதல்வா் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்த தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள்!

SCROLL FOR NEXT