4 நாள்களுக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவடைந்த நிலையில், 4 நாள்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.
ராமநாதபுரம்4 நாள்களுக்கு பிறகு மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவடைந்த நிலையில், 4 நாள்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா நிறைவடைந்த நிலையில், 4 நாள்களுக்கு பிறகு ஆயிரக்கணக்கான மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கடந்த பிப். 27, 28 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள ராமேசுவரத்திலிருந்து 3,700 இந்திய பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு 4 நாள்கள் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்திருந்தனா். இந்த நிலையில், அந்தோணியாா் ஆலயத் திருவிழா பிப். 28 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.