முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 17 மார்ச், 2026 at 10:04 PM
கைது
பகிர்:

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற கம்ன்ஸ்டன் ராஜ் (36), மினிட்டோ ராயப்பன் (40) ஆகிய மீனவா்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இவா்கள் இலங்கையில் உள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் செவ்வாய்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். விசாரணை நடத்திய நீதிபதி பொன்னுத்துரை கிருசாந்தன் வருகிற 24- ஆம் தேதி வரை அவா்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →