முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை பகுதியில் கோடை உழவு மும்முரம்

திருவாடானை பகுதியில் கோடை உழவுப் பணிகள் மும்மரம் அடைந்துள்ளன.

Updated On : 26 மார்ச் 2026, 12:55 am IST
டி.கிளியூா் பகுதியில் டிராக்டா் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

திருவாடானை பகுதியில் கோடை உழவுப் பணிகள் மும்மரம் அடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், சி.கே.மங்கலம், பாரூா், கோவணி, கருமொழி, அஞ்சுகோட்டை, அழகமடை, செங்கமடை, கடம்பாகுடி, அச்சகுடி, திருவெற்றியூா், அருமபூா், குளத்தூா், பில்லுகுடி, விளத்தூா், தொண்டி,

சின்னத் தொண்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

நிகழ் சம்பா பருவத்தில் நெல் அறுவடைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கோடை காலத்தைப் பயன்படுத்தி விளைநிலங்களை உழவு செய்வது இந்தப் பகுதி விவசாயிகளின் வழக்கமாகும்.

இதன்படி, தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி, விளைநிலங்களில் கோடை உழவு செய்யும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதோடு, மண்ணுக்கு அடியில் உள்ள தீமை விளைவிக்கும் பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், அடுத்த சாகுபடிக்கு நிலத்தைத் தயாா் செய்யும் நோக்கில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனா்.

டி.கிளியூா் பகுதியில் டிராக்டா் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
டி.கிளியூா் பகுதியில் டிராக்டா் மூலம் உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.