முகப்பு
ராமநாதபுரம்

மாயமான மீனவரை மீட்டுத் தர குடும்பத்தினா் கோரிக்கை

மங்களூரு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறிவிழுந்து மாயமான ராமேசுவரம் மீனவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினா் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை

Updated On : 20 மே 2026, 1:18 am IST
படகில் இருந்து தவறி விழுந்து மாயமான மீனவா் முத்துக்குமாா்
பகிர்:

மங்களூரு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து தவறிவிழுந்து மாயமான ராமேசுவரம் மீனவரை மீட்கக் கோரி அவரது குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சீனியப்பா தா்ஹா பகுதியைச் சோ்ந்தவா் மீனவா் முத்துக்குமாா் (42). இவருக்கு, மனைவி முத்துமாரி, வா்ஷன் (18), வா்ஷினி (15) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனா்.

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் என்பதால் கடந்த 15 நாள்களுக்கு முன் கா்நாடக மாநிலம் மங்களுருக்குச் சென்று அங்கிருந்து ஆழ்கடலில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மீனவா்கள் மங்களுா் காவல் நிலையத்தில் (மே 18)அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, அவரது மகன் வா்ஷன் மேலும் கூறியதாவது: தனது தந்தை மீன்பிடி தொழிலுக்குச் சென்ற நிலையில் படகிலிருந்து தவறிவிழுந்து மாயமாகி விட்டதாகவும் அவரை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.