முதுகுளத்தூர் அருகே புதன்கிழமை பயிர் காப்பீடு தொடர்பாக விவசாய நிலங்களை ஆய்வு செய்த புளியங்குடி வருவாய் குரூப் கிராம நிர்வாக அலுவலர், நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.
மதுரை பைக்காரவைச் சேர்ந்த பரமன் மகன் சதீஷ்(36).இவர் முதுகுளத்தூர் வட்டம் புளியங்குடி வருவாய் குரூப் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை புளியங்குடி கண்மாய் பகுதியில் பயிர் காப்பீடு பதிவு செய்த விவசாய நிலங்களை பார்வையிட்டார். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கிராமத்தினர் முதுகுளத்தூர் காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.