சிவகங்கை

அரசு பேருந்து மோதி இளைஞர் சாவு

DIN

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
    சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டியைச் சேர்ந்தவர் அழகுச்சாமி (27). இவர், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த இவர்,  வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் காரைக்குடியிலிருந்து சிங்கம்புணரிக்கு வந்து கொண்டிருந்துள்ளார்.    அப்போது, சிலநீர்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அழகுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, எஸ்.வி.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT