சிவகங்கை

காரைக்குடியில் மே 23 இல் மின் பயனீட்டாளர் குறை தீர்க்கும் கூட்டம்

DIN

காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் ஆ. அழகப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில், செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மின் பயனீட்டாளர்கள் கலந்துகொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT