முகப்பு
சிவகங்கை

திருத்தளிநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.
 குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்ட இந்த ஆலயத்தில்பிரதோஷ விழாவை முன்னிட்டு திருத்தளிநாதருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, இளநீர், சொர்ணம், பன்னீர், உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.
மேலும் சிவனுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று உற்சவர் உற்சவர் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் உள்பிரகாரத்தை பக்தர்களின் ஹரஹர சங்கர கோஷத்துடன் மும்முறை வலம் வந்தார். இவ்விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். பகதர்கள் அனைவருக்கும் பிரதோஷ குழுவினரால் பிரசாதம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →