சிவகங்கை

பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மகாசபைக் கூட்டம்

DIN

சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மகாசபைக் கூட்டம், காரைக்குடி அகத்தியன் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
      இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் வீ. சண்முகம் தலைமை வகித்தார். பொது மேலாளர் ஆ. முருகாநிதி முன்னிலை வகித்தார்.
    இதில், பால்வளத் துறை துணைப் பதிவாளர் ராமநாதபுரம் மற்றும் மானாமதுரை எஸ். கணேசன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணைய துணைப் பொதுமேலாளர் பி.எஸ். சுந்தரமகாலிங்கம், ஒன்றிய துணைத் தலைவர் வீ. நாகராஜன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத் தியாளர்கள் சங்கத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  
    இக்கூட்டத்தின் போது, நுகர்வோர்களுக்கு விற்க தரமான ஆவின் தயிர் 200 கிராம் புதிய பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை, நிர்வாக மேலாளர் கே. சங்கரன் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT