சிவகங்கை

புரட்டாசி முதல் சனி உற்சவம்: மானாமதுரை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்

DIN

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலுள்ள பல்வேறு பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதங்களில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. இதையொட்டி, மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டது. அதன்பின்னர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் சுந்தரராஜப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாரதனைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, பெருமாள் சன்னதியில் தெற்குமுகம் நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை, மலர் மாலைகள், வெள்ளிக்கவசம் சார்த்தி சகஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வீரழகரையும், வீர ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்தனர்.
மேட்டுத்தெரு பகுதியில் அமைந்துள்ள அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. புரட்சியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தியாக விநோதப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத மூலவருக்கு வெள்ளிக் கவசம் சார்த்தி அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர், மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்புப் பூஜைகள், மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இரவு பெருமாள் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகையாற்றுப் பாலம் அருகேயுள்ள சித்தி விநாயகர் கோயில், ரயில் நிலையம் எதிரேயுள்ள பூர்ணசக்கர விநாயகர் கோயில்களில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதிகள், பிருந்தாவனம் பகுதியில் அமைந்துள்ள தாச ஆஞ்சநேயர், ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில்களிலும் மூலவருக்கு வடைமாலை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மானாமதுரை அருகே வேம்பத்தூரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT