சிவகங்கை

வங்கியில் பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் திருட்டு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே வங்கியில் வைத்திருந்த நகையைத் திருப்ப வந்த பெண்ணிடம் ரூ.60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
   திருப்பத்தூர் அருகே சேவிணிப்பட்டியைச் சேர்ந்தவர் பூமாலை மனைவி நல்லம்மாள்(28). இவர் கீழச்சிவல்பட்டி  வங்கியில் தனது நகையை அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்கிழமை நகையை திருப்புவதற்காக வங்கிற்கு வந்துள்ளார். அப்போது நகை திருப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு பணம் கட்டுவதற்காக தனது தோளில் மாட்டியிருந்த பையில் வைத்திருந்த பணத்தை பார்த்தபோது,அதில் வைத்திருந்த ரூ.61.500 திருடு போனது தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT