முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் எல்ஐசி அலுவலகத்திலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 5:33 AM
பகிர்:

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் எல்ஐசி அலுவலகத்திலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு காப்பீட்டுக் கழக முதல்நிலை அதிகாரிகள் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்  திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காப்பீட்டுக் கழகத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அன்றாட அலுவல், ஆண்டு இறுதி மற்றும் மாத இறுதி கணக்கு முடிப்பு பணிகள் காரணமாக போராட்டத்தை கைவிட்டு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
 இதில், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டி, செயலர் கர்ணன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காப்பீட்டுக் கழக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.