மானாமதுரை மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்
மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் உ.ராஜாமணி தலைமை வகித்தார்.
மானாமதுரை ஒ.வெ.செ மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 6-வது பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் உ.ராஜாமணி தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் ஏ.ராமையா, எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், சங்கத்தின் சார்பில் செயல்பட்டுவரும் பொதுநூலகம் குறித்தும் அதன் வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர், சங்கத்தின் புதிய தலைவராக சோமசுந்தரமூர்த்தி, செயலாளராக சுகுமாறன், பொருளாளராக கருப்பையா, உதவித் தலைவராக சம்பத்குமார், துணைச் செயலாளராக தென்னவன், ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக ராஜாமணி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.