முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் அருகே பைக் - லாரி மோதல்: பெண் சாவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். அவரது தந்தை காயமடைந்தார்.

Updated On : 21 மே, 2018 at 11:53 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார். அவரது தந்தை காயமடைந்தார்.
திருப்புவனம் அருகே திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் சக்கரபாணி மனைவி முத்தாயி (36). இவர் தனது தந்தை கருப்பையாவுடன் இருசக்கரவாகனத்தில் பின்னால் அமர்ந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருப்புவனம் அருகே மணலூர் என்ற இடத்தில் வந்தபோது ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்தாயி சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த கருப்பையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.