சிவகங்கை

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: காரைக்குடி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

DIN

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சியைப்பெற்றுள்ளது. தேர்ச்சியடைந்த மற்றும் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட் டினர்.
சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில், இப்பள்ளியைச்சேர்ந்த அறிவியல் பாடப்பிரிவு மாணவ, மாணவியர்கள் 35 பேர், வணிகவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 12 பேர் என தேர்வு எழுதிய 47 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் செ. சத்தியன், பள்ளியின் முதல்வர் சிவகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி ஷீலா இம்மாகுலேட் மற்றும் துணை முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT