தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக காரைக்குடியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ் தேச மக்கள் கட்சியினர் 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸாரின் துப்பாக்
கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து காரைக்குடி பெரியார்சிலை பகுதியில் தமிழ் தேச மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்க்குமரன் தலைமையில் அக்கட்சியினர் கோஷமிட்டமாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து 12 பேரை கைது செய்தனர்.