சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மீது சிவகங்கை அனைத்து மகளிர் நிலைய போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழாய்குடி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த ஆண்டு தங்கி படித்து வந்தாராம்.இந்நிலையில் உறவினரின் சகோதரர் திருநாவுக்கரசு (27) என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.