சிவகங்கை

காரைக்குடியில் பலத்த மழை

DIN

காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை மாலையில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
கடந்த சில தினங்களாகவே கடும் வெயிலால் இப்பகுதியினரை வெப்பம் வாட்டியது. செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. பிற்பகல் 3.45 மணியளவில் மேகம் திரண்டு லேசான மழையாக பெய்யத் தொடங்கி, பின்னர் கனமழையாக சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்தது.  இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.   கார், பேருந்து மற்றும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. இந்த கன மழையால் நகரில் வாட்டி வதைத்த வெப்பம் ஓரளவு தணிந்து தற்போது குளிர்ச்சி நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT