சிவகங்கை

சிவகங்கையில் ஆக.30-இல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

DIN

சிவகங்கையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சி.கே. சர்மிளா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில்,  ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை உயர் அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, விவசாயம் சார்ந்த குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT