உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் மொத்தம் 3,261 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தில் 3,748 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 5 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் (அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள்) மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 19 போ், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கு 219 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 820 போ், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 1,255 போ் என மொத்தம் 2,313 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
கடந்த 5 நாள்களில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவி உள்பட அனைத்துப் பதவிகளுக்கும் 3,261 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.