சிவகங்கை

திருக்கோஷ்டியூரில் நாளை ஹயக்ரீவர் ஹோமம்

DIN

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள அரசுப் பொதுத் தேர்வில் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற வேண்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 6) ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற உள்ளது.
திருக்கோஷ்டியூர் யாதவ திருமண மண்டபத்தில்  நடைபெறும் இந்த ஹோமத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். காலை 8 மணிக்கு ஸ்ரீசுதர்சன ஹோமும் அதனைத் தொடர்ந்து, ஸ்ரீஹயக்ரீவர் ஹோமும் நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் நல்ல தேர்ச்சி பெற வேண்டி பிரார்த்தனை நடைபெறும். ஹோமம் நிறைவடைந்த பின்னர் பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் மாணவர்களுக்கு ஆசி வழங்குவார். இந்த ஹோமத்துக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு பிராமணர் சங்க திருக்கோஷ்டியூர் கிளையினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT