சிவகங்கை

தேவகோட்டையில் வழிப்பறி செய்தவர் கைது

DIN

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
 தேவகோட்டை அருகே உள்ள பாவனக்கோட்டை  மோயன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (46). இவர், தேவகோட்டையில் இருந்து காலை 10 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தார். மாரிச்சான்பட்டி என்ற இடத்தில், தேவகோட்டை  அருகே உள்ள  தாணீச்சாவூரணியைச் சேர்ந்த சோனையன் மகன் கணேசன் (38) வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பால்ராஜிடமிருந்த ரூ.1500 ஐ பறித்துக்கொண்டார். 
இதையடுத்து உடனடியாக பால்ராஜ் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப் புகாரின் பேரில் போலீஸார் கணேசனை கைது செய்து மேலும்  விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT