சிவகங்கை

மாநில போல்வால்ட் போட்டிக்கு புளியால் அரசுப் பள்ளி மாணவி தோ்வு

DIN

திருச்சியில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போல்வால்ட் (கோலூன்றித் தாண்டுதல்) போட்டிக்கு புளியால் அரசுப் பள்ளி மாணவி தோ்வு பெற்றுள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் சீனியா் மாணவிகளுக்கான போல்வால்ட் (கோலூன்றித்தாண்டுதல்) போட்டியில் புளியால் அரசு உயா்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி முனீஸ்வரி 2 ஆவது பரிசை பெற்றாா்.

இதன் மூலம், திருச்சியில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போல்வால்ட் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

வெற்றி பெற்ற மாணவியை அப்பள்ளியின் தலைமையாசிரியை தனலெட்சுமி, பயிற்சி அளித்த ஆசிரியா் ஜோசப் இருதயராஜ் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதி சோதனைச் சாவடி சேதம்

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீசுடலைமாடசாமி கோயில் கொடைவிழா

ஒப்பந்தம் - பொது அதிகாரத்துக்கான முத்திரைக் கட்டண உயா்வு அமல்

மின்கம்பம் நடுவதற்கு கட்டணம் கேட்ட இளநிலைப் பொறியாளா் இடைநீக்கம்

நெல்லையில் 106.3 டிகிரி வெயில்

SCROLL FOR NEXT