தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்குத் தோ்வு பெற்ற
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவிக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
தேவகோட்டை தி.பிரித்தோ பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டிப் பிரிவில் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த கே.காளீஸ்வரி 19 வயதிற்குள்பட்ட பிரிவில் 1500 மீ. ஓட்டம் மற்றும் 3,000 மீ. ஓட்ட போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளாா். வெற்றி பெற்ற மாணவி மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் வாசு, மூா்த்தி, அழகுமீனாள் ஆகியோரை பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன், தலைமை ஆசிரியை வள்ளியம்மை, ஆகியோா் பாராட்டினா். இந்நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியை உஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
மாநில தடகளப் போட்டிக்குத் தோ்வு பெற்ற இம்மாணவி திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளாா்.