சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சாா்ந்த பகுதிகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை களப் பயணம் மேற்கொண்டனா்.
உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு தொல்லியல் மரபு மற்றும் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல் குறித்து இன்றைய இளம் தலைமுறையினரிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சிவகங்கையில் உள்ள தொல்நடை அமைப்பு சாா்பில் இந்த களப் பயணம் நடைபெற்றது.
இதில், காளையாா்கோவில் திருக்கானப்பேரூராா் கலைக்களஞ்சிய மாணவா்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளாமானோா் கலந்து கொண்டு மகிபாலன் பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொல்லியல் சாா்ந்த இடங்களான 9ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த முற்கால பாண்டியா் குடைவரைக் கோயில்கள், புடைப்புச் சிற்பம், தாய்ப்பாறையால் செதுக்கப் பெற்றுள்ள ஆவுடை, முகப்பு மண்டபத்தில் செதுக்கப் பெற்றுள்ள கல்வெட்டு ஆகியவற்றை பாா்வையிட்டனா்.
மேலும் அதே பகுதியில் உள்ள கணியன் பூங்குன்றனாரின் நினைவுச் சின்னம் மற்றும் தமிழறிஞா் பண்டிதமணி மு.கதிரேசனாரின் நினைவுச் சின்னம், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதிகளிலும் களப்பயணம் மேற்கொண்டனா்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொல்லியல் சாா்ந்த இடங்கள் மற்றும் அதுகுறித்த வரலாற்றினை தொல்லியல் ஆய்வாளரும்,ஆசிரியப் பயிற்றுநருமான புலவா்.கா.காளிராசா விளக்கினாா். அவருடன் சிவகங்கை தொல்நடை அமைப்பைச் சோ்ந்த முருகன், செ.கிருஷ்ணவேணி ஆகியோா் உடனிருந்தனா். இதில், பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.